முத்துக்குமரன் அமர்வு - நெய்தல் திணைப் பாடல்கள்
முத்துக்குமரன் அமர்வு - நெய்தல் திணைப் பாடல்கள்:
இன்றைய நெய்தல் நில மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் தொழிலையும் நெய்தல் திணை பாடலைக் கொண்டு நான் நேரடியாகவே வாழ்ந்த என் அனுபவங்களை இந்த பகுதியில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
வாசிப்புப் பகுதிகள்:
நெய்தல் பாடல் 1 : நற்றிணை (49) - கொடியூர்கிழார் மகனார் நெய்தல் தத்தனார்
*படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து,
எமரும் அல்கினர்; ''ஏமார்ந்தனம்'' எனச்
சென்று நாம் அறியின், எவனோ தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே?*
நெய்தல் பாடல் 2 : அகநானூறு(30) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
*நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,*
*உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,*
*பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,*
*பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!*
*பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, ''நும்
வண்ணம் எவனோ?'' என்றனிர் செலினே?*
நெய்தல் பாடல் 3 : குறுந்தொகை (163) அம்மூவனார்
*யார் அணங்குற்றனை கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?*
Comments
Post a Comment